Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மதுபான கடை அருகே உள்ள அரியாண்டிபட்டி கண்மாய்கரையில் பொதுமக்கள் சென்ற பொழுது அங்கு கழுத்தறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில்,பிரேதத்தின் அருகில் மதுபான பாட்டில்கள் உடைந்தும், அருகில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அருகில் உள்ள அஞ்புளிபட்டியை சேர்ந்த அடைக்கப்பன் என்பதும், வெளியூரில் வசித்து வந்த அடைக்கப்பன் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உடலில் பல்வேறு கத்தி காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த அடைக்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த அடைக்கப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் முன் விரோதமாக கொல்லப்பட்டாரா?அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.